ராயபுரத்தில் அதிகபட்சமாக 2065பேருக்கு கொரோனா.. சென்னையில் பாதிப்பு குறைந்தது எங்கு..வெளியானது லிஸ்ட்
சென்னை: சென்னை ராயபுரத்தில் அதிகபட்சமாக 2065 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டல வாரியான சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரத்தை இப்போது பார்ப்போம்.
Recommended Video
தமிழகத்தி நேற்று ஒரே நாளில 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் மட்டும் 548 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சபட்சமாகும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17082 ஆக உயர்ந்துள்ளது. .சென்னையில் மட்டும் 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. .
சென்னையில் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு மரணம்.. எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை.. இறப்பின் பின்னணி
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம். அடைப்புக்குறிக்குள் நேற்று காலை நிலவரம்
திருவெற்றியூர்: 322 ( 300)
மணலி: 152 (142)
மாதவரம் 237 ( 223)
தண்டையார் பேட்டை 1096 (1044)
இராயபுரம் 2065 (1981)
திருவிக நகர் 1253 (1188)
அம்பத்தூர் 472 (446)
அண்ணா நகர் 924 (867)
தேனாம்பேட்டை 1188 (1188)
கோடம்பாக்கம் 1488 (1460)
வளசரவாக்கம் 740 (703)
ஆலந்தூர் 132 ( 121)
அடையாறு 619 ( 579)
பெருங்குடி 185 (168)
சோழிங்கநல்லூர் 184 (173)
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 74 (நேற்று 63)
எந்த மண்டலத்தில் எத்தனை பேர் குணம் அடைந்துள்ளனர் மற்றும் உயிரிழந்துள்ளனர், மருத்துவமனையில உள்ளார்கள் என்ற விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.