"சைலண்ட் மோட்" தங்க தமிழ்செல்வன்.. அமமுகவில் என்ன நடக்க போகிறது.. புயல் வருமா.. புஸ்ஸாகுமா
அமமுக ஆலோசனை கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் அமைதியுடன் காணப்பட்டாராம்
Recommended Video
சென்னை: நேத்து அமமுக கூட்டத்துல தங்க தமிழ்செல்வன் வாயே திறக்கலையாம்.. அப்படி ஒரு சைலன்ட்டாக இருந்துவிட்டு போய் இருக்கிறார்.. இந்த அமைதிதான் நிறைய யோசிக்க வைத்துள்ளது.
தேர்தல் ரிசல்ட் வந்ததில் இருந்தே அமமுக கொஞ்சம் அடக்கியே வாசித்து வருகிறது. டிடிவி தினகரன் மட்டும் பெங்களூர் சென்று வந்தார், செய்தியாளர்களை சந்தித்து வருகிறார், தோல்விக்கான விளக்கத்தை முடிந்தவரை சொல்லி வருகிறார்.
நேற்றுகூட அமமுகவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது தினகரனிடம் நிர்வாகிகளும், தோற்று போன வேட்பாளர்களும் புலம்பி தள்ளி இருக்கிறார்கள்.
இந்த பக்கம் வந்தீங்க.. அடிச்சு ஓட விட்ருவோம் பார்த்துக்கோங்க.. காளியம்மாள் ஆவேசம்!
புலம்பல்
"எங்களுக்கு யாரும் சரியா வேலை பார்க்கல.. கட்சி தந்த பணத்தை நிர்வாகிகள் செலவு பண்ணல. குக்கர் கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்.. பரிசுபெட்டியை சீக்கிரமா மக்கள் கிட்ட கொண்டு போக முடியல. இனிமே நாம போட்டியிட்டா கூட்டணிதான் வெக்கணும், இப்படி தனியா நின்னு மாட்டிக்க கூடாது" என்று தனித்தனியாக புலம்பி உள்ளனர்.
வாயே திறக்கவில்லை
ஆனால் தங்க தமிழ்செல்வன் மட்டும் வாயே திறக்கவில்லையாம். தொகுதிகளில் ஏன் தோற்றோம் என்று பலர் விளக்கம் சொன்னபோதும், இவர் எதுவுமே சொல்லவில்லை. மற்றவர்கள் மீதும் புகார் தெரிவிக்கவில்லை. ஆலோசனை கூட்டத்தில் அப்படி ஒரு அமைதியாக இருந்தாராம். உடனே செய்தியாளர் சந்திப்பு நடந்தது. வழக்கமாக தினகரன் கூடவே வந்து நிற்கும் தங்க தமிழ்செல்வன், அதை தவிர்த்துவிட்டு நடையை கட்டி இருக்கிறார்.
ஒருசிலர் போகலாம்
இதன்பின்னர்தான் செய்தியாளர்களிடம் தினகரன் எட்டு வழி சாலை எதிர்ப்பு குறித்தெல்லாம் பேசியபோது, "கட்சியில் இருந்து ஒருசிலர் போகலாம். ஆனா அதை பெரிசா எடுத்துகொள்ளமாட்டேன். எல்லாரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்று இல்லை. யாரையும் கட்டுப்படுத்தி கட்சியில் இருக்க சொல்லவும் இல்லை" என்றார்.
மவுனம் ஏன்?
இப்படி தினகரன் யாரை பற்றி சொல்ல வருகிறார்? தங்க தமிழ்செல்வனின் மவுனத்தின் காரணம் என்ன? இதெல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தால் எங்கேயோ இடிக்குதே!