4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. 16 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இதனால் தீவிரமாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் மழை பெய்ய இதுதான் காரணம். இந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை நாளுக்கு நாள் வலிமை அடைந்து கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை.. வெள்ளக்காடான மாவட்டங்கள்.. நீலகிரியில் அதிதீவிர மழை
என்ன ரெட் அலெர்ட்
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று அதி தீவிர மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று எப்படி
அதேபோல் இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும். திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, கன்னியாக்குமரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தீவிரம் அடையும்
இந்த மழை படிப்படியாக தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கனமழை பெய்யும். அதன்பின் காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் 2 நாட்களில் கனமழை அதி தீவிர மழையாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை எப்படி
சென்னையில் இன்று சாரல் மழை பெய்யும். இன்று மாலைக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.