திசைமாறும் கஜா புயல்.. ஆந்திரத்துக்கு ரெட் அலர்ட் வாபஸ் #CycloneGaja
Recommended Video
சென்னை: கஜா புயலின் திசை வேறுபக்கம் நகர்வதால் ஆந்திரத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இது தமிழகம், தெற்கு கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுவை ஆகியவற்றுக்கு நன்மையை தரும்.
இந்நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளதாகவும் அதற்கு கஜா என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த புயல் 15-ஆம் தேதி கரையை கடக்கும் என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கூறினர். இதுபோல் இந்த புயலால் ஆந்திரத்துக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
[பேரிடர் மீட்பு பணியில் உள்ள அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது... அரசு வலியுறுத்தல்!]
நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் ஆந்திரத்தில் கனமழை பெய்யும் என கூறப்பட்டது. இந்நிலையில் கஜா புயல் மேற்கு மற்றும் வடமேற்கில் நகர்கிறது. எனவே ஆந்திரத்துக்கு வழங்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.