செப். 7 முதல் ரயில் சேவை இயக்கம்- நாளை முதல் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
சென்னை: பயணிகள் ரயில் செப்டம்பர் 7-ந் தேதி இயக்கப்படுவதால் கவுன்ட்டர்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா லாக்டவுன அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து ரயில், விமான சேவைகளும் நிறுத்தப்பட்டது.
சுமார் 5 மாதங்களுக்குப் பின்னர் லாக்டவுன் கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதனால் பேருந்து, ரயில்சேவைகள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
பயணிகளுக்கு முக கவசம், வெப்ப பரிசோதனை கட்டாயம்- மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு முறைகள் வெளியீடு
தமிழகத்தில் செப்டம்பர் 7-ந் தேதி முதல் பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளை முதல் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.