மும்பையிலிருந்து வந்தவருக்கு கொரோனா? பூந்தமல்லி அபார்ட்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரும் கண்காணிப்பு
சென்னை: சென்னை பூந்தமல்லியில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று சந்தேகத்தில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அனைவரும் வீட்டு காவலில் வைக்கபட சுகாதார துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஜமால் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மும்பையில் இருந்து ஒருவர் வந்ததாக கூறபடுகிறது.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்க சுகாதார துறை அதிகாரிகள் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
திருச்சி கொரோனா வார்டில் சிகிக்சை அளித்த மருத்துவருக்கு வைரஸ் அறிகுறிகள்!
இதனை தொடர்ந்து இன்று பூந்தமல்லி நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் இன்று ஜமால் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் அனைவரும் வீட்டு காவலில் இருக்கும்படி உத்தரவிட்டனர். அதாவது தனிமைப்படுத்தப்பட்டனர்.