ஆத்தாடி.. இது என்ன சாலையா.. இல்லை தீவா.. கடல் போல் காட்சியளிக்கும் தாம்பரம் அகரம் சாலை!
Recommended Video
சென்னை: சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் அருகே திருவாஞ்சேரியில் உள்ள அகரம் சாலையில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அதன் பிறகு வந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் அந்தளவுக்கு மழை பெய்யவில்லை.
இதனால் ஆண்டுதோறும் தண்ணீர் பஞ்சம், வறட்சி, விவசாயம் செழிப்பின்மை ஆகியவற்றால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கனமழை
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது.
செம்பரம்பாக்கம் ஏரி
தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டும் அதிகபட்சமாக 6 மணி நேரத்தில் 146 மி.லிட்டர் மழை கொட்டியது. இதனால் தாம்பரம்- வேளச்சேரி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.
வீடுகள்
இந்த நிலையில் முடிச்சூர், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. தாம்பரம் அருகே திருவாஞ்சேரியில் அகரம் முக்கிய சாலையில் தண்ணீர் தேங்கியது.
|
கடல் போல் காட்சி
இதனால் முக்கிய சாலையில் இரு புறமும் கடல் போல் காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பள்ளம், மேடு தெரியாமல் பயந்து பயந்தே சாலைகளை கடக்கும் நிலை ஏற்பட்டது.