கேரளாவை தொடர்ந்து கொரோனா பணியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் ரோபோ- அமைச்சர்
சென்னை: கேரளாவை தொடர்ந்து கொரோனா பணியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பல நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் பல்வேறு நாடுகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கேரள மருத்துவமனைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்திலும் ரோபோக்களை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் ஸ்டான்லி மருத்துவமனையை ஆய்வு செய்தேன். அங்கு கொரோனா வார்டுகளில் பயன்படுத்தப்படவுள்ள ரோபோக்களின் செயல்பாடுகளை சோதனை செய்தேன்.
#update: Visited #Stanley Hospital morning.Checked the functions of #roboticnurses to be used in #corona wards, that can deliver food. &medicine.This will limit the amount of direct contact doctors and nurses have with patients, thus reducing the risk of infection.@MoHFW_INDIA pic.twitter.com/GNL6LSWaAP
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 3, 2020
இந்த ரோபோக்கள் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்துகளை அளிக்கும். இதன் மூலம் நோயாளிகளுடன் மருத்துவர்கள், செவிலியர்களின் நேரடி தொடர்பு குறைக்கப்பட்டும் நோய் தொற்றும் அபாயமும் குறைக்கப்படும் என்றார்.