சென்னையில் போலீசார் அதிரடி என்கவுண்ட்டர்- ரவுடி சங்கர் சுட்டுக் கொலை
சென்னை: சென்னை அயானவரத்தில் போலீசார் நடத்திய எனகவுண்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னையில் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்ட ரவுடி சங்கர், அயனாவரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் ரவுடி சங்கரை சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசாரை ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டினார். இதில் முபாரக் என்ற போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரவுடி சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து ரவுடி சங்கர் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தியா தாக்குதல் நடத்தினால். அணு ஆயுத யுத்தம்தான்... கடைசி போரும் மிரட்டும் பாக். அமைச்சர்
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சங்கர் மீது 37 வழக்குகள்
சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி சங்கர் மீது 4 கொலை வழக்குள், 4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடிதடி, ஆட்கடத்தல் வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி துரைமுத்துவை போலீசார் பிடிக்க சென்ற போது அவர் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசி காவலர் சுப்பிரமணியன் மற்றும் ரவுடி துரைமுத்தும் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது சென்னையில் என்கவுண்டர் நடைபெற்றது. இந்த சம்பவத்தினால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.