போலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு
Recommended Video
சென்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்திய நிலையில், ரவுடி ஒருவரின் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, புளியந்தோப்பு நரசிம்மர் நகர் பகுதியை சேர்ந்தவர் எழிலரசன் (25 ). கடந்த வருடம் ராதா (எ) ராதாகிருஷ்ணன் என்ற முதியவரை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று புளியந்தோப்பு திருவிக தெருவை சேர்ந்த வியாபாரி ஒருவரை மிரட்டி மாமூல் கேட்டதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 30கும் மேற்ப்பட்ட திருநங்கைகள் மற்றும் வழக்கறிஞர்கள் புளியந்தோப்பு போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். போலீசார் அத்துமீறி வீட்டிற்கு புகுந்து பொருட்களை சேதப்படுத்தி, எழிலரசனை அழைத்து வந்ததாக கூறி அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென எழிலரசன் மனைவி காயத்ரி, தன் மீது மண்ணென்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். போலீசார் அவரை தடுத்து தண்ணீர் ஊற்றினார்கள். தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறபடுத்தினர். பின் எழிலரசன் மீது வழக்குபதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ