எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்திற்கு அபராதம் விதித்த ஐகோர்ட்.. பள்ளிகல்வித்துறைக்கு செலுத்த உத்தரவு
சென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல், முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்பு நடத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில், எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு ஓராண்டு மற்றும் ஈராண்டு முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு, தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழான சேர்க்கை அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
நீட் தேர்வை மாணவர்களிடமே விட்டுவிடுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை அறிவுரை
முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை நடத்துவதற்கு மத்திய அரசிடமோ, இந்திய மருத்துவ கவுன்சிலிடமோ எந்தவித அனுமதியும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முறைப்படி பெறவில்லை. எனவே இந்த அறிவிப்பு சட்ட விரோதம் என்பதால், அதனை செல்லாது என உத்தரவிட கோரிக்கை விடுத்திருந்தார்.
சீனாவசனின் வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஏற்கனவே இதை போன்ற பல வழக்குகளை விசாரித்துள்ள நீதிமன்றம், தொலைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்த உரிய அனுமதி பெற அறிவுறுத்தியுள்ளது. எனினும் நீதிமன்ற உத்தரவுகளை மீறியே தற்போது தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் செயல்பட்டுள்ளது.
இதை அனுமதித்தால் மக்களை தவறாக வழி நடத்துவதை போன்று அமைந்து விடும். எனவே மனுதாரர் சீனிவாசனின கோரிக்கையை ஏற்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
மேலும் உரிய அனுமதியின்றி முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்பு நடத்தியதற்காக, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை தொடர்ந்து நடத்த எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு தடை விதிப்பதாகவும் கூறியுள்ளது.
அபராதமாக விதிக்கப்பட்டுள்ள ரூ.5 லட்சத்தை அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு செலவிடும் வகையில், பள்ளிக் கல்வித்துறையிடம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.