சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 வருஷம் ஓடிடும்.. அப்பறம் ராகுல்தான் பிரதமர்.. பரோட்டா சூரி போல் கோட்டை அழித்து கணக்கு போடும் மாஜி!

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.

    சென்னை: 5 வருஷம் வேகமாக ஓடிவிடும். அப்புறம் ராகுல்காந்திதான் பிரதமர் என திருச்சி எம்பியும் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான எஸ் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் ஸ்டாலின். இதை சில கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன.

    ஆனால் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமர் நாற்காலிக்கு ஆசைப்பட்டனர். அதில் ராகுல் காந்தியும் ஒருவர். என்ன ஒரு வித்தியாசம் என்றால், ராகுல் காந்தி அப்பதவிக்கு நிர்பந்திக்கப்பட்டார்.

    நிறையப் படிக்கணும் அங்கிள், ஆர்மியில் சேரணும்.. விஸ்வநாத்துக்கு உதவுங்களேன்! நிறையப் படிக்கணும் அங்கிள், ஆர்மியில் சேரணும்.. விஸ்வநாத்துக்கு உதவுங்களேன்!

    52 இடங்களில் வெற்றி

    52 இடங்களில் வெற்றி

    கடைசியில் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது. காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை கூட பெறமுடியவில்லை. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுவிட்டது.

    ராஜினாமா

    ராஜினாமா

    இந்த நிலையில் கீழ்மட்டத் தலைவர்கள் சரியாக தேர்தல் பணியாற்றவில்லை என்ற கடுங்கோபத்தில் ராகுல்காந்தி உள்ளனர். இந்த கோபத்தின் வெளிப்பாடே தலைமை பொறுப்பை ராஜினாமா செய்ய முன்வந்தது.

    அடுத்த பிரதமர்

    அடுத்த பிரதமர்

    இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி தொகுதி எம்பியுமான எஸ் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும். அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என தெரிவித்துள்ளார்.

    வியூகம்

    வியூகம்

    இவரது இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியது. பரோட்டா சூரி போல் கோட்டை அழித்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது போல் திருநாவுக்கரசரின் பேச்சு உள்ளதாகவும் வெற்றிக்கு வியூகம் வகுக்காமல் கோபத்தில் உள்ள ராகுல் காந்தியை சாந்தப்படுத்த இதுபோன்ற ஐஸ்கட்டிகளை தலையில் வைப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர்.

    English summary
    Trichy MP and EX Tamilnadu Congress Committee's President S.Thirunavukkarasar says that Rahul Gandhi will be the next PM.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X