என்னாது யாகம் நடத்தியதால்தான் மழை வந்ததா.. அப்ப தமிழிசை யாகம் நடத்தட்டும்.. திருச்சி காங்கிரஸ் எம்பி
Recommended Video
சென்னை: யாகம் நடத்தியதால்தான் மழை வந்தது என கூறும் தமிழிசை யாகம் நடத்திக் கொண்டே இருக்கட்டும் என திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் திருச்சி மக்களவை உறுப்பினர் எஸ் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசலாம்.
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் போன்ற பதவிகளில் கட்சி சார்பற்று போட்டியிடலாம். பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு பயப்படுகிறது.
வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் திமுக தலைமையில் இப்போது உள்ள கூட்டணி தொடர வேண்டும். யாகம் நடத்தியதால் தான் மழை வந்தது என்று சொல்லும் தமிழிசை யாகம் நடத்தட்டும்.
அதே சமயம் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும். தமிழகத்தில் மழை இல்லாத காரணத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியை மத்திய அரசு பேரிடராக அறிவித்து உதவி செய்ய முன்வர வேண்டும்.
தண்ணீர் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என தெரிவித்தார்.