பாஜக ஆபீசுக்குள் நோ-என்ட்ரி சொன்ன தமிழிசைக்கு கெட்-அவுட்டா? எஸ்.வி.சேகர் சொல்வதை பாருங்க
சென்னை: தமிழக பாஜக அலுவலகத்திற்குள் எஸ்.வி.சேகரை நுழைய அக்கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி வழங்கவில்லை என்ற விவகாரத்தில் டிவிட்டரில் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் எஸ்.வி.சேகர்.
"பாஜக தலைமை அலுவலகத்திற்கு தன்னை அழைப்பதேயில்லை என எஸ்.வி.சேகர் கூறிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலளிக்க மறுப்பு" என நெட்டிசன் வெளியிட்ட ஒரு ட்வீட்டை ஷேர் செய்துள்ள எஸ்.வி.சேகர், அதில், பரவாயில்லை விடுங்க. இன்னும் கொஞ்ச நாள் தானே 😂 என்று கமெண்ட் போட்டுள்ளார்.
தமிழிசை பதவியை காலி செய்ய பாஜகவில் சில கோஷ்டிகள் முயல்வதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், எஸ்.வி.சேகர், எல்லாமே கொஞ்ச நாள் என ட்வீட் செய்துள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது. மேலும், பாஜகவில் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளதையும் எடுத்துக் காட்டுகிறது.
பாஜக ஆபீசுக்குள் கால் வைக்க கூடாது.. எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்ட தமிழிசை