சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா.. வைகோவை பார்த்து எஸ்.வி.சேகர் கேட்டாரே ஒரு கேள்வி!

வைகோவின் கருத்துக்கு எஸ்வி சேகர் வினா எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வைகோவை பார்த்து எஸ்.வி.சேகர் கேட்டாரே ஒரு கேள்வி!- வீடியோ

    சென்னை: 3 பெண்களை பஸ்சில் எரித்து கொன்றவர்களை விடுதலை செய்தது குறித்த வைகோவின் கருத்துக்கு எஸ்வி சேகர் வினா எழுப்பி உள்ளார்.

    சமீபத்தில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில், குற்றவாளிகள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

    S.Ve. Shekar questioned Vaikos Comment

    இந்த விடுதலைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தன. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரும் இன்னமும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.

    ஆனால் ஆளுநர் இதற்கு மட்டும் விடுதலை அளிக்க ஒப்புதல் அளித்தது சர்ச்சையாகியுள்ளது. இந்த 3 பேரின் விடுதலை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவிக்கையில், "மூன்று தமிழ் பெண்களை கொன்றவர்களை விடுதலை செய்தது தவறு", என்று கூறியிருந்தார்.

    வைகோவின் இந்த கருத்துக்கு பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் ட்விட்டரில் கேள்வி ஒன்றினை எழுப்பி உள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "மூன்று தமிழ் பெண்களை கொன்றவர்களை விடுதலை செய்தது தவறு: வை கோ. சரியான கருத்து.

    ராஜீவ் கொலையில் உடன்கொல்லப்பட்ட 14 பேரும் தமிழர்களா இல்லை பாகிஸ்தான்காரர்களா என்று குதர்க்கமாக கேட்டுள்ளார் எஸ்.வி.சேகர். இப்படியே மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுட்டே இருந்தா, பிறகெப்படி...!??

    English summary
    MDMK Vaiko had commented on the release of 3 people in Dharmapuri Bus Case. S.Ve. Sekhare has raised question on Twitter about it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X