ஆஹா.. வைகோவை பார்த்து எஸ்.வி.சேகர் கேட்டாரே ஒரு கேள்வி!
வைகோவின் கருத்துக்கு எஸ்வி சேகர் வினா எழுப்பி உள்ளார்.
Recommended Video
சென்னை: 3 பெண்களை பஸ்சில் எரித்து கொன்றவர்களை விடுதலை செய்தது குறித்த வைகோவின் கருத்துக்கு எஸ்வி சேகர் வினா எழுப்பி உள்ளார்.
சமீபத்தில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில், குற்றவாளிகள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
இந்த விடுதலைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தன. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரும் இன்னமும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.
ஆனால் ஆளுநர் இதற்கு மட்டும் விடுதலை அளிக்க ஒப்புதல் அளித்தது சர்ச்சையாகியுள்ளது. இந்த 3 பேரின் விடுதலை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவிக்கையில், "மூன்று தமிழ் பெண்களை கொன்றவர்களை விடுதலை செய்தது தவறு", என்று கூறியிருந்தார்.
மூன்று தமிழ் பெண்களை கொன்றவர்களை விடுதலை செய்தது தவறு :வை கோ.
— S.VE.SHEKHER (@SVESHEKHER) December 4, 2018
சரியான கருத்து. ராஜீவ் கொலையில் உடன் கொல்லப்பட்ட 14 பேரும் தமிழர்களா 😭 இல்லை பாகிஸ்தான்காரர்களா ⁉️⁉️
வைகோவின் இந்த கருத்துக்கு பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் ட்விட்டரில் கேள்வி ஒன்றினை எழுப்பி உள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "மூன்று தமிழ் பெண்களை கொன்றவர்களை விடுதலை செய்தது தவறு: வை கோ. சரியான கருத்து.
ராஜீவ் கொலையில் உடன்கொல்லப்பட்ட 14 பேரும் தமிழர்களா இல்லை பாகிஸ்தான்காரர்களா என்று குதர்க்கமாக கேட்டுள்ளார் எஸ்.வி.சேகர். இப்படியே மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுட்டே இருந்தா, பிறகெப்படி...!??