மோடி கிருஷ்ண பரமாத்மா.. திமுக- காங். கூட்டணியை புறக்கணிப்போம்.. எஸ் வி சேகர் திடீர் ஆவேசம்
Recommended Video
சென்னை: மோடி கிருஷ்ண பரமாத்மா போல் இருக்கிறார் என்றும் திமுக- காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிக்க வேண்டும் என பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திராவிடக் கழகம், திமுகவை கண்டித்து எஸ் வி சேகர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் எஸ் வி சேகர் பேசுகையில் முதலில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது நம்முடைய தேசம், அடுத்தது மதம், அதற்கடுத்தபடியாக இனம், மொழி ஆகிய எல்லாம் வரும்.
பாட்ஷாவா, மாணிக்கமா.. சாராய ஆலை அதிபர் வேணுமா? இந்த டாக்டர் வேணுமா? முடிவெடுங்க.. ராமதாஸ்!
இந்துவுக்கு எதிரான கட்சிகள்
ஆனால் அதே சமயத்தில் திமுக, திராவிடக் கழகங்கள் நம்முடைய தேசத்தையும் இந்து மதத்தையும் எத்தனை கேவலமாக விமர்சிக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். அவர்களுக்கு கத்தியின்றி ரத்தமின்றி பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
யுத்தம்
இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு நம்முடைய ஒரு வாக்குக் கூட செல்லக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும். கத்தியின்றி ரத்தமின்றி நடக்கக் கூடிய யுத்தம்தான் இந்த தேர்தல்.
பாரத பிரதமர்
ஒரு விரலில் நடக்கக் கூடிய விரல் புரட்சி. கிருஷ்ண பரமாத்மாவை போல நம்முடைய நரேந்திர மோடி இருக்கிறார். அவர்தான் மீண்டும் பாரத பிரதமராக வர போகிறார்.
தீர்மானம்
இந்து மத எதிர்ப்பாகவும், இந்து மத நம்பிக்கைக்கு எதிராகவும், நம் தாய் நாட்டை இழிவாகவும் விமர்சிக்கும் திமுக- காங்கிரஸ் கூட்டணியை இந்த தேர்தலில் புறக்கணிப்போம். அவர்களுக்கு நம்முடைய வோட்டு கிடையாது என்பதில் தீர்மானமாக நாம் இருப்போம் என்றார் அவர்.