குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாம்.. ஆட்டுக்காக ஓநாய் அழுவுது.. எஸ் வி சேகர் கடும் தாக்கு
சென்னை: குடும்ப கட்சியான திமுகவுக்கு நாட்டு நலனில் அக்கறையிருக்கிறதாம். ஆடு நனையுதேனு ஓநாய் அழுவுவது போல் உள்ளது என பாஜக பிரமுகர் எஸ் வி சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 பேரும் எதிர்ப்பாக 80 பேரும் வாக்களித்தனர்.
இந்த சட்டத்திருத்தத்தின்படி மேற்கண்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக உள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தினரும் குடியுரிமை அளிக்க அனுமதி அளிக்க வகை செய்யும். இவர்கள் இந்தியாவுக்குள் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் குடிபெயர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
சொந்த குடும்ப கட்சியிலேயே தன்னை எதிர்த்தா குடும்பத்துல இருக்கிறவங்க பதவியை பறிச்சு கட்சியைவிட்டு அனுப்பறவங்க குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கறாங்களாம். ஐய்யோ ஐய்யோ. குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாமாம். ஆட்டுக்காக ஒநாய் அழுவுது.
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) December 10, 2019
இந்த மசோதா நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சொந்த குடும்ப கட்சியிலேயே தன்னை எதிர்த்தா குடும்பத்துல இருக்கிறவங்க பதவியை பறிச்சு கட்சியைவிட்டு அனுப்பறவங்க குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கறாங்களாம். ஐய்யோ ஐய்யோ. குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாமாம். ஆட்டுக்காக ஓநாய் அழுவுது என தெரிவித்துள்ளார்.