"பாயும் புலி" முழுபலத்தோட வரும்.. அப்ப ஓட்டம் பிடிப்பீங்க.. எஸ்ஏ சந்திரசேகருக்கு எஸ் வி சேகர் பதிலடி
Recommended Video
சென்னை: புலி முழுபலத்தோட வரும் போது துண்டை காணும் துணியை காணும்னு ஓட்டம் பிடிக்கும் போது என்ன சொல்லணும்னு இப்பவே யோசிச்சு வச்சிக்கோங்க என இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகருக்கு எஸ் வி சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
ரஜினி கடந்த 2017-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இரு ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில் அவர் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அடுத்த ஆண்டு கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய்யை அரசியலில் இறக்க அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முயற்சித்து வருகிறார். அதே சமயம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து எஸ் ஏ சி கடும் பதிலடி கொடுத்து வருகிறார்.
விஜய்
அண்மையில் நடந்த ஒரு விழாவில் எஸ் ஏ சந்திரசேகர் பேசுகையில் தமிழன் என்று சொல்வதில் எப்போதுமே, ஒரு திமிர் உண்டு. அப்படிப்பட்ட தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும். தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என அவர் கூறிய கருத்து விஜய்யை விமர்சிக்கும் வகையில் இருந்தது.
எஸ் ஏ சி விமர்சனம்
இந்த நிலையில் அவரிடம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் புலி வருது கதை தான் ரஜினியின் அரசியல் என கடுமையாக எஸ் ஏ சி விமர்சனம் செய்திருந்தார்.
|
ரஜினி அரசியல்
இதுகுறித்து பாஜகவின் எஸ் வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் புலி வருது கதைதான் ரஜினியின் அரசியல் - SA சந்திரசேகர்.
நேர்மையான ஒருத்தர்
#Rajini 2021ல புலி முழுபலத்தோட வரும் போது துண்டைக்காணும் துணியை காணும்னு ஓட்டம் பிடிக்கும் போது என்ன பேசணும்னு இப்பவே யோசிச்சு வைச்சுகுங்க. நேர்மையான ஒருத்தர் தமிழக அரசியலுக்கு வரக்கூடாதுன்னு தெளிவா இருக்காப்ல. ரஜினி நிச்சயம் தமிழகத்தின் முதல்வராவார் என தெரிவித்துள்ளார்.