கிஸ்ஸை வைத்து என்னா மாதிரி பேசுறாருய்யா இந்த சுரேஷ்.. யாரைக் கலாய்க்கிறார் பாருங்க!
சென்னை: முத்தத்தை வைத்து என்ன மாதிரி பேசுறாரு பாருங்க இந்த சுரேஷ், அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். எப்படி வரம் கொடுத்தவர் தலையிலேயே கை வைக்கிறார் பாருங்கள்.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு விளையாட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த 3 சீசன்களிலும் ஒவ்வொரு வில்லிகள் இருந்தனர். முதல் சீசனில் காயத்ரி ரகுராம், 2ஆவது சீசனில் ஐஸ்வர்யா தத்தா, 3ஆவது சீசனில் ஷாத்ஷாத் நம்ம வனிதா அக்கா ஆகியோர் நெகட்டிவ் கேரக்டர்களாக இருந்தனர்.
பிக்பாஸ் சீசன் 4 தொடங்கியுள்ள நிலையில் ஷனம் ஷெட்டி எப்போதும் சண்டை போடுபவராகவே இருந்து வருகிறார். அது போல் சுரேஷுக்கும் அனிதா சம்பத்திற்கும் லடாய் முற்றியுள்ளது.
எப்படித்தான் மனசு வருகிறதோ.. 4 வயது பிஞ்சு குழந்தை பலாத்காரம்.. அதே ஹத்ராஸில்தான்.. உறவினர் கைது
நிகழ்ச்சி
இருவரும் பரஸ்பரம் பேசிக் கொள்வதே இல்லை. அது போல் நேற்றைய நிகழ்ச்சியில் சுரேஷுக்கும் பாடகர் முருகனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அது போல் ரியோவுக்கும் சுரேஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தால் சுரேஷ்தான் வில்லன் போன்று காணப்படுகிறார்.
சுரேஷ்
வில்லத்தனம் இருக்கும் அதே சுரேஷிடம் நகைச்சுவை உணர்வும் அதிகமாகவே இருக்கிறது. இதுகுறித்து எஸ்வி சேகர் தனது ட்விட்டரில் கூறுகையில் , சுரேஷ் சக்ரவர்த்திக்கு இருக்கும் SENSE OF HUMOUR அசாத்தியம். இவர் யாரை கலாய்க்கிறார் கண்டு பிடிங்க என்று கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ரேகா
அதில் சுரேஷ் பிக்பாஸ் வீட்டில் ரேகாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதாவது கமல்ஹாசன் கதாநாயகிகளுடன் முத்தமிடும் காட்சிகளில் நடிக்கும் போது மற்ற ஹீரோயின்களை விட உங்களுக்கு (ரேகா) பெருமை அதிகம். என்னன்னு சொல்லுங்க என ரேகாவிடம் கேட்கிறார்.
ரேகா
அதற்கு ரேகாவோ எனக்கு தெரியவில்லையே என்கிறார். உங்களுக்கு கிஸ் செய்துவிட்டு ஹீரோ தற்கொலை செய்து கொண்டதுதான் என்கிறார். அதற்கு அனைவரும் சிரிக்கிறார்கள், ரேகாவுக்கு புரியவில்லை. என்னாது என கேட்கிறார்.
புன்னகை மன்னன்
அங்கிருப்பவர்கள் புன்னகை மன்னன் படம் குறித்து அவர் கூறுகிறார் என்கிறார்கள். அதற்கு ரேகாவோ அவர் தற்கொலை செய்து கொள்கிறார், ஆனால் அவர் சாகவில்லையே என்று ரேகா பதிலளிக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு கமல்ஹாசனையே கலாய்த்துள்ளார் சுரேஷ்.