துக்க வீட்டுக்கு போறதுக்குகூட போஸ்டர் அடிக்கணுமா.. அதுவும் சாதியை சொல்லி.. மீண்டும் சிக்கலில் காங்.!
சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சியினர் அடித்து ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: "துக்கம் விசாரிக்க சாத்தான்குளம் போகிறார் கேஎஸ் அழகிரி.. ஆனால், ஊரெல்லாம் அவரை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.. ஒரு எழவு வீட்டுக்கு போறதுக்குகூட இப்படி போஸ்டர் அடித்து ஒட்டணுமா என்ற கேள்வி எழுகிறது..தேவையில்லாத வேலைகளை செய்து, காங்கிரஸ் மேலும் சிக்கலில் மாட்ட போகிறது என்று மட்டும் தெரிகிறது.
"ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் நாடார் உயிரிழக்க காரணமான போலீசார் மீது விசாரணை நடத்த வேண்டும்" என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர், கேஎஸ். அழகிரி அறிக்கை விடவும், ட்விட்டர்வாசிகள் கொந்தளித்துவிட்டனர்.
"அது என்ன நாடார்.. இதுல நாடார் எங்க வந்தது.. எல்லாரையும் ஜாதி பாத்துதான் பேசுவீங்களா? காங்கிரஸ் தேசிய கட்சியா? இல்ல நாடார் கட்சியா? தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இது என்ன ஜாதி அரசியல்? உங்களுக்கும் பாமகவிற்கும் என்ன வித்தியாசம்? ஜெயராஜ், பெனிக்ஸ் இம்மானுவேல் என்று பதிவிட்டால் போதாதா? இடத்தை பொறுத்து ஜாதிப்பெயரை சேர்த்து கொள்வீர்களா?" என்றெல்லாம் கேள்வி மேல் கேட்டு துளைத்தெடுத்தனர்.
தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் முன் வைக்கும் 8 ஆலோசனைகள்... உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தல்
சாதி
ஆனால், அழகிரி ஏன் அப்படி ஜாதியை குறிப்பிட்டு அறிக்கை விட்டார் என தெரியவில்லை.. 2 அப்பாவிகள் இப்படி உயிர் பலி எடுக்கப்பட்டிருப்பதை அனைவருமே ஒரே குரலில் கண்டித்தபோது யாருமே ஜாதியை பார்க்கவில்லை என்பதே உண்மை.. மனதை உலுக்கிய மரணமாக மட்டுமே அது இப்போது வரை பார்க்கப்பட்டும் வருகிறது.. அப்படி இருக்கும்போது, ஒரு தேசிய கட்சியின் தலைவர் எதற்காக சாதியை கொண்டு வந்து அறிக்கையில் நுழைக்க வேண்டும் என்ற கேள்வி அப்போதே எழுந்தது.
சாத்தான்குளம்
ஆனால், இந்த போக்கை தமிழக காங்கிரஸ் மாற்றிக் கொள்ளவும் இல்லை, கொஞ்சமும் திருத்தி கொள்ளவும் இல்லை என்று தெரிகிறது.. இன்றைக்கு ஒரு போஸ்டர் அடித்து காங்கிரஸ் கட்சியினர் சாத்தான்குளத்தில் ஒட்டி உள்ளனர்.. அதில், சாத்தான்குளத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் நாடார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கூற இன்று வருகை தருகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
எம்பி கனிமொழி
இதுவரை, திமுக எம்பி கனிமொழி முதல் எத்தனையோ பேர் அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தந்தனர்.. இன்னமும் பலர் அவர்களின் துக்கத்தில் பங்கெடுத்து ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.. ஆனால் சம்பவம் நடந்து இன்றுதான், அழகிரி அந்த ஊருக்கே போகிறார்.. அதுவும் துக்கம் விசாரிக்க போகிறார்.. ஒரு துக்க வீட்டுக்கு போறதுக்குகூட இப்படி போஸ்டர் அடித்து ஒட்டணுமா என்ற கேள்வி நமக்கு இயல்பாகவே எழுகிறது.. இந்த போஸ்டர்கள் சோஷியல் மீடியாவிலும் வெளியாகி உள்ளது.
குஷ்பு வருத்தம்
இதை பார்த்து காங்கிரஸ் கட்சியின் குஷ்புவே கண்டித்துள்ளார்.. "செய்த தவறுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்" என்று குஷ்பு சொல்லி உள்ளார். தாங்கள் செய்தது தவறு என்றுகூட தெரியாமல் தூத்துக்குடி காங்கிரசார் உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.. இப்படி ஒரு போஸ்டரே ஒரு துக்க கரமான நேரத்தில் தேவையில்லாதது.. சாதி பார்க்காமல், மொத்த பேரையும் கொரோனா அலேக்காக தூக்கி கொண்டு போய் வருகிறது என்பது தெரிந்தும், இப்படி "வெறி" கொண்டு போஸ்டர் அடித்து கொண்டிருந்தால் இந்த நாடு தாங்காது!