சத்தியமா.. அவங்க காலை கட்டி பிடித்து அழ தோணுது.. "புரட்சிப் பெண்" ரேவதிக்கு குவியும் வாழ்த்து!
சாட்சி கூறிய பெண் போலீசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன
சென்னை: "எனக்கு அந்த பெண் காவலர் காலை பிடித்து கட்டி புடிச்சு அழ தோணுது சத்தியமா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 உண்மை.. நேர்மை.. தர்மத்தின் மொத்த உருவம்.. இல்லை கடவுள்.. இல்லை நீதிமான் என்ன சொல்ல" என்று சாத்தான்குளம் பெண் போலீஸ் ரேவதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன!
கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் தலைமை காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் சாத்தான்குளம் வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
"ஆமா.. அப்பா, மகன் 2 பேரையும் அங்கிருந்த போலீஸ்காரங்க ராத்திரியெல்லாம் அடிச்சாங்க.. விடிய விடிய அடிச்சாங்க.. லத்தியால் அடிச்சாங்க.. அந்த லத்தியிலும், டேபிளிலும் ரத்தக்கறை இருந்தது.. அதனை அழிக்க நேரிடும், உடனே கைப்பற்றணும்" என்றார்.
சக காவலர்கள் என்றுகூட பார்க்காமல், தனக்கு பின்விளைவுகள் ஏதாவது வருமா என்றுகூட பயப்படாமல், எதிராக சாட்சி அளித்த ரேவதிக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. "மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதிக்கு வாழ்த்து என்றும், உங்களோடு தேசம் துணை நிற்கிறது. உங்கள் துணிச்சலும் தைரியமும் நீதி மீதான எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கிறது.. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் மேம்" என்று நன்றி சொல்லி வருகின்றனர்.
அதேபோல, பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.. இதுகுறித்து, எனக்கு அந்த பெண் காவலர் காலை பிடித்து கட்டி புடிச்சு அழ தோணுது சத்தியமா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 உண்மை.. நேர்மை.. தர்மத்தின் மொத்த உருவம்.. இல்லை கடவுள்.. இல்லை நீதிமான் என்ன சொல்ல" என்று ஏகஉச்சத்துக்கு கொண்டாடி வருகின்றனர்.
சாத்தான்குளம் பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒரு மாதம் விடுப்பு.. ஐஜி முருகன் தகவல்
"நீதிதேவதைக்கு பாதை அமைத்துத்தந்த காவல் தேவதை" என்றும் 'நாட்டிலுள்ள எல்லா ஆண்களும், நேர்மையானவர்கள் என்று கூறமுடியாது! சில தீயவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுபோல, 'நாட்டிலுள்ள எல்லா பெண்களும், கெட்டவர்கள் அல்ல! நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்" என்றும் ரேவதியை வாழ்த்துக்களால் குளிர வைத்து வருகின்றனர்.