தமிழை அழிக்கும் எந்த மொழியும் தேவையில்லை- சகாயம் ஐஏஎஸ் பேச்சு
சென்னை: தமிழை அழித்து வளரும் ஒரு மொழி தேவையே இல்லை என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.
லயோலா மாணவர் அரவணைப்பு மையம் - லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து வழங்கும் "6-வது வீதி விருது விழா" நடைபெற்று வருகிறது.
2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 5000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதன் துவக்க விழாவில் பங்கேற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். தமிழ் பாரம்பரிய கலைகள் அழிந்து விடக் கூடாது. அவை முறையாக பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ்மொழி இன்று எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. தமிழ்மொழியின் அழிவில் தான் ஆங்கிலம் வளர்கிறது என்றால், அப்படிப்பட்ட ஆங்கிலம் தேவையே இல்லை என்று பேசினார்.
Comments
English summary
Sagayam IAS says that we dont want any language which destroys Tamil.