ஆத்தூர்ல.. வருஷா வருஷம் கரெக்டா வந்துரும் இந்த ஆலங்கட்டி மழை!
சென்னை: கோடை மழைன்னு ஒண்ணு இருக்கறதே பாவம் நம்ம சென்னை வாசி குழந்தைகளுக்கு தெரியாது. அப்படி ஆகிப் போச்சு நம்மளோட மழை நிலவரம்.
வெயில்.. கொளுத்தும் வெயில் இதுதான் இவங்களுக்கு கோடை காலத்துக்கான அடையாளம். பீச், பார்க், சினிமா தியேட்டர், இன்னும் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைச்சுட்டு போய், கோடை பொழுதை வெயிலோட கழிப்பாங்க.
என்னதான் காவிரி நதி ஓடும் புண்ணிய பூமியாக காவிரி டெல்ட்டா பகுதி இருந்தாலும், அங்கும் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கோடை மழை பெய்வதை வானம் நிறுத்திக்கிச்சு.
29ம் தேதி உருவாகிறது புயல்.. சென்னை - நாகை இடையே கடக்கலாம்.. கடலோர மாவட்டங்களில் 'கன மழை' உறுதி
ஆனால், கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், ஏற்காடு,சேலம், ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு போன்ற ஊர்களில் கோடை மழை தப்பாமல் பெய்து விடும். சில சமயம் தலைகாட்டிப் போகும் மழை, பல சமயங்களில் விடாது அடை மழையாகவும் பெய்யும்.
இதைவிட ஒரு முக்கியமான விஷயம் என்னன்னு பார்த்தா ஆலங்கட்டி, பெரும் காற்றுடன் மழை பெய்யும் பாருங்க.. அது காணக்கோடி இன்பம். வருஷம் தவறினாலும், கோடை மழை என்று ஒன்று இந்த பகுதிகளில் தலை காட்டாமல் போனதே இல்லை.
ஆலங்கட்டி மழை பெய்தால் ஒட்டு வீடு என்றால் அதில் அந்த ஆலங்கட்டி பட்டு உடைந்து சிதறி முற்றத்தில் விழும் .. குழந்தைகள் எடுக்க ஆவலாக ஓடினால் தூள் தூளாகத்தான் ஆலங்கட்டி கிடைக்கும். அது தெருவில் நின்று எடுத்தால் பெரிய பெரிய ஆலங்கட்டிகள் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு இந்த கோடை மழை எவ்வளவு மகிழ்ச்சியை தரும் என்பதை அனுபவித்தவர்களுக்கு தெரியும். நேற்று ஒன்றரை மணி நேரம் சேலம் ஆத்தூர், தம்மம்பட்டி, மல்லியக்கரை, பெத்தநாயக்கன் பாளையம், சொக்கநாதபுரம் போன்ற ஊர்களில் விடாமல் கோடை மழை அடை மழையாக பெய்திருக்கிறது. அதுவும் ஆலங்கட்டிகளுடன்..
சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர்..வீ ட்டு முற்றங்கள் மூழ்கி, தாழ்வாரம் வரை தண்ணீர் என்று வேடிக்கை காட்டிவிட்டு போயிருக்கிறது கோடை மழை. வரவேற்போம் மாமழையை..!