வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. பல மாவட்டங்களில் இடியுடன் கனமழை - வானிலை மையம்
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் இடியுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடியும் நேரம் வந்து விட்டது வடகிழக்குப் பருவமழை துவங்கப்போகிறது. அதற்கு முன்னதாக வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அடுத்த 48 மணிநேரத்தில் மழை எங்கெங்கு பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பூர் மாவட்டங்களில் மழை பெய்யும்.
அடுத்த 48 மணி நேரத்தில் ராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர் திருவண்ணாமலை, தருமபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும்.
மருத்துவம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு- ஆளுநர் ஒப்புதல் தர வைரமுத்து வலியுறுத்தல்
19ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அக்டோபர் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்கும் அந்தமான் கடல் பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.