சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கவுசல்யாவிற்கு மாலை கொடுத்த சங்கரின் பாட்டி.. வாழ்த்திய சங்கரின் பெற்றோர்.. நெகிழ்ச்சி நிமிடம்

மறுமணம் செய்திருக்கும் உடுமலைபேட்டை கவுசல்யாவிற்கு சங்கரின் பெற்றோர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பறை இசைக் கலைஞரை கோவையில் மறுமணம் செய்த கவுசல்யா- வீடியோ

    சென்னை: மறுமணம் செய்திருக்கும் உடுமலைபேட்டை கவுசல்யாவிற்கு சங்கரின் பெற்றோர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

    உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய நபர்களுக்கு கவுசல்யா சட்ட போராட்டம் மூலம் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார்.

    வாழ்ந்து காட்டு பெண்ணே!.. சமூக வலைதளங்களில் கவுசல்யாவிற்கு குவியும் வாழ்த்து! வாழ்ந்து காட்டு பெண்ணே!.. சமூக வலைதளங்களில் கவுசல்யாவிற்கு குவியும் வாழ்த்து!

     பல கேள்விகள்

    பல கேள்விகள்

    இந்த நிலையில் இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைத்தளங்கள் முழுவதும் கவுசல்யாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். அதே சமயம் தற்போது கொல்லப்பட்ட சங்கரின் பெற்றோரின் மனநிலை எப்படி இருக்கும் என்றும் சிலர் கேள்விகளை கேட்டு இருந்தனர்.

     ஆனால் மகிழ்ச்சி

    ஆனால் மகிழ்ச்சி

    ஆனால் இந்த திருமண நிகழ்வில் சங்கரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரின் பெற்றோர் இதில் கலந்து கொண்டனர். அதேபோல் சங்கரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் கலந்து கொண்டனர்.

     மாலை கொடுத்தார்

    மாலை கொடுத்தார்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கவுசல்யா - சக்தி திருமணத்திற்கு மாலை கொடுத்ததே சங்கரின் பாட்டிதான். சங்கரின் பாட்டி மாரியாயி தம்பதிக்கு மாலை எடுத்து கொடுத்தார். அவர்கள் காலில் விழுந்து தம்பதிகள் மரியாதை செய்தனர்.

     வாழ்த்து தெரிவித்தனர்

    வாழ்த்து தெரிவித்தனர்

    அதேபோல் சங்கரின் பெற்றோர் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். சங்கரின் தந்தை வேலுச்சாமி, சங்கரின் இரு இளைய சகோதரர்கள் விக்னேஷ் மற்றும் யுவராஜ் ஆகியோர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் தம்பதிகளை வாழ்த்திய சம்பவம் அங்கு பலருக்கு நெகிழ்ச்சியை கொடுத்தது.

    English summary
    Sankar family wished Udumalaipettai Kowsalya for her marriage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X