சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிசயம் நிகழும்.. சுஜித் மீண்டு வந்து அம்மா, அப்பா என்றழைக்க வேண்டும்.. சரத்குமார் உருக்கமான பதிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிசயம் நிகழும் சரத்குமார் உருக்கமான பதிவு

    சென்னை: அதிசயங்கள் நிகழும். சுஜித் மீண்டு வந்து அப்பா, அம்மா என்றழைக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

    Sarathkumar says that Sujith to be rescued from the borewell

    அப்போது அவர் அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து 4ஆவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறுவன் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட வேண்டும் என அனைவரும் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

    திரைப்பட நடிகர் தாமு இன்று காலை சம்பவ இடத்துக்கே சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். இதுகுறித்து சரத்குமார் வீடியோ மூலம் ட்விட்டரில் கூறியிருக்கையில் ஆழ்துளை கிணற்றில் போராடி கொண்டிருக்கும் குழந்தை சுஜித் மீட்கப்பட வேண்டும். அதிசயங்கள் நிச்சயம் நிகழும்.

    அவன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்வோம். மணிகள் கடந்தாலும் அவன் மீட்கப்பட்டு அவனது தாய், தந்தையரை பார்த்து அம்மா , அப்பா என்றழைக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. இதுவே அனைவரது பிரார்த்தனையாகும். அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.

    English summary
    Sarathkumar says that Sujith to be rescued from the borewell and he should see his mother and father and call them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X