சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜயா ஆஸ்பத்திரியில் சரவணபவன் ராஜகோபால்... ஐசியூவில் அனுமதி.. தீவிர சிகிச்சை

விஜயா ஆஸ்பத்திரியில் ராஜகோபால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கவலைக்கிடம்- வீடியோ

    சென்னை: அண்ணாச்சி ராஜகோபாலை சென்னை விஜயா ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு ஐசியூ வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் கடந்த வாரம் ஹைகோர்ட்டில் சரணடைந்தார். வரும்போதே ஆம்புலன்சில் வந்த அவருக்கு கோர்ட் வளாகத்திலேயே உடம்பு இன்னும் முடியாமல் போனது.

    Saravana bhavan Rajagopal admitted in Vijaya Hospital

    அதனால் ஜெயிலுக்கே போகாமல், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிட சிரமமாக இருந்ததால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை தரப்பட்டு வந்தது.

    ஆனாலும் தொடர்ந்து உடல்நிலை மோசமானதாலும், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் போதிய வசதி இல்லை என்பதாலும், பிரைவேட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி தர வேண்டும் என்று அவரது மகன் சரவணன் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இதனை ஏற்ற கோர்ட்டும், ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. இதையடுத்து அண்ணாச்சி வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை டாக்டர்கள் உடனிருந்து கண்காணித்து வருகின்றனர்.

    2 முறை ஏற்கனவே அண்ணாச்சிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வயது 71 ஆகிறது.. தற்போது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதால் அவரது குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.

    English summary
    Saravana bhavan owner Annachi Rajagopal has admitted in Chennai Vijaya Hospital in ICU Ward
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X