அக்கா இல்லாமல் எப்படி என் மகன் கல்யாணத்தை நடத்துவது.. திகைத்து நிற்கும் திவாகரன்
சென்னை: சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்துக்கு திருமண வயது வந்துவிட்டது. இதனால் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
டிடிவியின் தம்பி பாஸ்கரன் மகளை ஜெய் ஆனந்துக்கு திருமணம் செய்து வைக்க உள்ளதாக கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே தகவல் உலா வந்தது. ஆனால் குடும்பச்சண்டை காரணமாக அந்தப்பேச்சு அப்படியே நிற்கிறதாம்.
ஜெய் ஆனந்த் வயதை ஒட்டியுள்ள இளவரசியின் மகன் விவேக்குக்கு திருமணம் முடிந்து குழந்தையே பிறந்துவிட்டது. இதனால் திவாகரனின் மனைவி, தனது மகன் ஜெய் ஆனந்துக்கு திருமணம் செய்துவைக்கலாம் எனக் கூறுகிறாராம்.
ஆனால் அக்கா சிறையில் உள்ள சூழலில் மகனுக்கு திருமணத்தை நடத்த திவாகரனுக்கு விருப்பமில்லையாம். தனக்கும் சசிகலாவுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அக்காவை விட்டுக்கொடுக்க தம்பியால் முடியவில்லையாம். அதனால் சசியுடன் தனக்கு இருக்கும் மனக்கசப்பை போக்கிய பின் திருமண ஏற்பாடுகளை தொடங்கலாம் என திவாகரன் எண்ணுகிறாராம்.
முதுகுவலியால் அவதிப்படும் ஓ.பி.எஸ்... பிரச்சார களைப்புக்கு காரணம் இது தான்!
சசிகலா கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு சிறை வாழ்க்கையை நிறைவு செய்துள்ள நிலையில், இன்னும் அவர் வெளியே வர ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கிறது. இப்படி பல கோணங்களில் திவாகரன் யோசித்துவருகிறாராம்.
ஒருவேளை இப்போது மகனுக்கு திருமணத்தை வைத்தால் தன் மீதுள்ள கோபத்தில் அக்கா பரோலில் கூட வரவில்லை என்றால் என்ன செய்வது என்று திவாகரன் நினைக்கிறாராம். அத்தை கலந்து கொள்ளாமல் திருமணத்தை நடத்த ஜெய் ஆனந்துக்கும் விருப்பமில்லாததால், திவாகரன் அமைதி காத்து வருகிறாராம்.