சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்னிய செலாவணி மோசடி வழக்கு.. சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

Google Oneindia Tamil News

சென்னை: அன்னிய செலாவணியில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் சசிகலா நேரில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதாவின் தோழியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருமான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் மீது வேறு சில வழக்குகளும் வெவ்வேறு நீதிமன்றங்களில் உள்ளன.

ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில் சசிகலா, பாஸ்கரன் இருவரும் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக இவர்கள் மீது அமலாக்கத்துறை ஐந்து வழக்குகளை பதிவு செய்தது.

கொல்லப் போறாங்க.. தாவ போறாங்க.. ஜாதி பார்க்கிறாங்க... மோடி என்ன இப்படி இறங்கிட்டாரு.. தோல்வி பயமா?கொல்லப் போறாங்க.. தாவ போறாங்க.. ஜாதி பார்க்கிறாங்க... மோடி என்ன இப்படி இறங்கிட்டாரு.. தோல்வி பயமா?

வீடியோ கான்பிரன்சிங்

வீடியோ கான்பிரன்சிங்

சசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு சேர்த்து 3 வழக்குகளும். இருவர் மீதும் தனி தனியாக 2 வழக்குகளும் தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு அவர் தனது வாக்குமூலத்தை ஆடியோ மூலம் பதிவு செய்தார்.

நேரில் ஆஜராக உத்தரவு

நேரில் ஆஜராக உத்தரவு

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வரும் 13 ஆம் தேதி சசிகலாவை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிபதி உத்தரவு

நீதிபதி உத்தரவு

சசிகலா ஆஜராகும்போது சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் குறித்து விளக்கம் கேட்கவும் நீதிபதியின் கேள்விக்கு பதில் அளிக்கவும் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார்.

English summary
The Egmore court has issued an order Sasikala to appear in the foreign exchange case on 13th of May. Egmore court ordered Bengaluru prison admin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X