நெருங்குது அரசியல் ஆட்டங்கள்...சட்டப்படி செப். இறுதியில் சசிகலா விடுதலை- அடித்து சொல்லும் வக்கீல்
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா இம்மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் நிச்சயம் விடுதலையாவார் என்று அவரது வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ செந்தூர் பாண்டியன் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டி:
சசிகலா இம்மாத இறுதிக்குள் சிறையில் இருந்து விடுதலையாவார். பெங்களூர் சிறைவிதிகளின்படியும், சட்டப்படியும் நிச்சயம் இம்மாத இறுதியில் விடுதலையாகிவிடுவர்.
இம்மாத இறுதியில் விடுதலையாகவில்லை எனில் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியே வந்துவிடுவார் சசிகலா. பெங்களூரு சிறை நன்னடத்தை விதிகளின்படி மார்ச் மாதமே சசிகலா விடுதலை பெற வேண்டும்.
தமிழகத்தில் செப்.7 முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்- நாளை முதல் முன்பதிவு தொடக்கம்- முழு விவரம்
ஆனால் கொரோனா லாக்டவுன் காலத்தால் சசிகலா விடுதலை தாமதமாகிவிட்டது. கொரோனா பிரச்சனையால் சசிகலாவை 7 மாதங்களாக சந்திக்க முடியவில்லை. இவ்வாறு ராஜ செந்தூர் பாண்டி தெரிவித்துள்ளார்.