சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுகவை வழிநடத்துவார் சசிகலா.. சொல்வது சுப்பிரமணியன் சுவாமி

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுகவை வழிநடத்துவார் என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

Sasikala will lead AIADMK, says SUbramanian Swamy

இந்திய தண்டனை சட்டத்தின்படி என்கவுண்ட்டர் என்பது தவறு. தெலுங்கானாவில் கைதிகள் போலீசாரை தாக்க முயற்சித்திருக்கின்றனர். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.

சரியான பொருளாதார கொள்கையை நாம் பின்பற்றவில்லை. வெங்காய விலை உயர்வு என்பது நமது தோல்விதான். வருமான வரியை முழுமையாக ரத்து செய்தால்தான் பொருளாதார பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.

58-ம் கால்வாய் உடைப்புக்கு பன்றிகள் தான் காரணம்... அமைச்சர் உதயகுமார் கண்டுபிடிப்பு58-ம் கால்வாய் உடைப்புக்கு பன்றிகள் தான் காரணம்... அமைச்சர் உதயகுமார் கண்டுபிடிப்பு

பொருளாதாரம் தொடர்பாக நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். அவை லட்சக்கணக்கில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியவில்லை.

Sasikala will lead AIADMK, says SUbramanian Swamy

சாமியார் நித்தியானந்தா தனிநாடு உருவாக்கினால் நமக்கு என்ன பிரச்சனை? அது அமெரிக்காவுக்கான பிரச்சனை. சிறை தண்டனைக் காலம் முடிவடைந்த பின் அதிமுகவை சசிகலா வழிநடத்துவார். அதற்கான திறமை சசிகலாவுக்கு இருக்கிறது.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

English summary
BJP Rajyasabha MP Subramanian Swamy said that Sasikala will lead AIADMK party after her release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X