"டோட்டல் சேஞ்ச்".. கம்முன்னு சசிகலா.. பேச்சை குறைச்சு.. செயல்ல காட்டுவோம்.. புது அவதாரம் பூணுகிறார்!
டாக்டர்களிடம் சசிகலா பேசிய பேச்சு வெளியாகி உள்ளது
சென்னை: வழக்கமான சசிகலாவாக இப்போது அவர் இல்லை.. முன்பை விட வைராக்கியமாக மாறியிருக்கிறார்.. அவரை வேறு கோணத்தில் தமிழ்நாடு பார்க்கப் போகிறது என்று அமமுகவினர் கூறுகிறார்கள்.
மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது டாக்டர்களும் கூட சசிகலாவின் மனோதிடத்தைப் பார்த்து மிரண்டு போய் விட்டனராம்.
வழக்கமான நோயாளிகள் போல நீங்கள் இல்லை, ரொம்ப திடமாக இருக்கிறீர்கள்.. அதனால்தான் கொரோனா சீக்கிரமே குணமாகி விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைராக்கியம்
சசிகலாவும் இப்போது முன்பை விட உறுதியாக மாறியிருக்கிறாராம். வைராக்கியம் அதிகரித்துள்ளதாம். இதுவரை அவர் யாரையும் தொடர்பு கொண்டு பேசவில்லையாம். அமைதியாக இருக்கிறாராம். தனது உறவுகளிடமும் கூட, ஆடக் கூடாது. அமைதியாக இருக்கணும் என்று கூறியுள்ளாராம்.
ஆட்டம்
இதற்கு அர்த்தம், ஆட்டம் போட்டு காரியத்தைக் கெடுக்கக் கூடாது. இனி நேரடியாக நான் மக்களிடமே போகப் போறேன். பேச்சைக் குறைத்து விட்டு செயலில் நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும். எனக்கு இது மறு பிறவி போல. இனி மக்களுடன்தான் இருப்பேன் என்று உற்சாகமாக கூறியுள்ளாராம் சசிகலா. தனது உடல் நிலையை சற்று ஸ்திரப்படுத்தி விட்டு மக்களிடம் வந்து சேர அவர் தயாராகி வருகிறாராம்.
சந்திப்பு
அதிமுகவை கைப்பற்றுவது என்பதில் அமமுக உறுதியாக உள்ளது என்ற போதிலும் கூட மக்களை நேரடியாக சந்திக்கும் சசிகலாவின் திட்டம்தான் அமமுகவை உற்சாகப்படுத்தியுள்ளது. மக்களிடம் நாம் போகும்போது தானாகவே அதிமுக மொத்தமாக நம் பக்கம் வந்து விடும் என்பதே அவர்களின் உற்சாகம். அதிமுகவினரும் கூட பெரும் ஆர்வத்துடன் சசிகலாவுக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள்.
ஜெயில்
பெங்களூரில் அத்தனை மாஸ் காட்டிய அமமுகவின் அதிரடியைப் பார்த்து கர்நாடகவே ஆடிப் போய் விட்டதாம். இத்தனை காலம் ஜெயிலில் இருந்த ஒருவருக்கு இப்படி ஒரு வரவேற்பா என்று அங்கு ஆச்சரியப்டுகிறார்கள். இங்கேயே இத்தனை வரவேற்பு என்றால் சசிகலாவுக்கு தமிழ்நாட்டில் எப்படி வரவேற்பு அளிக்கும் அமமுக என்பதே பலரின் ஆச்சரியமாக உள்ளது.