இதுதான் நிவர் புயலா.. அதுக்குள் இவ்வளவு கிட்ட வந்துடுச்சா.. சென்னையை நெருங்கியது.. சாட்டிலைட் போட்டோ
சென்னை: நிவர் புயல் தற்போது எங்கே இருக்கிறது என்பது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழகத்தை வரும் 25ம் தேதி நிவர் புயல் தாக்க உள்ளது. காரைக்கால் - மஹாபலிபுரம் இடையே இந்த புயல் கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது.
இன்னும் நிவர் புயல் முழுமையாக உருவாகவில்லை. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் இது இன்னும் சில மணி நேரங்களில் புயலாக உருவெடுக்கும்.
|
புயல்
இந்த நிவர் புயல் வங்கக்கடலில் இருந்து வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு அருகே வரும். சென்னைக்கு அருகில் மஹாபலிபுரம் இடையே இந்த புயல் கரையை கடக்கலாம். தற்போது வரை இது கணிக்கப்பட்ட பாதையில்தான் பயணிக்கிறது.
|
வேகம்
இந்த புயல் கரையை கடக்கும் போது 120 கிமீ வேகம் வரை செல்ல வாய்ப்பு உள்ளது. இது அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும். நிவர் புயல் தற்போது எங்கே இருக்கிறது என்பது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து 620 கிமீ தூரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் உள்ளது.
|
வலிமை பெற்றுள்ளது
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது இன்னும் வலிமை அடைந்துள்ளது சாட்டிலைட் புகைப்படங்கள் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது. மேலே இருக்கும் புகைப்படத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காட்டப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதி தற்போது இலங்கைக்கு அருகில் இருக்கிறது.
|
நகரும்
புகைப்படத்தில் இது கொஞ்சம் சென்னைக்கு அருகில் உள்ளது போல தோன்றினாலும், மாமல்லபுரம் அருகே வர 30 மணி நேரத்திற்கும் அதிகம் ஆகும். இதில் மையம் போல இருக்கும் பகுதிதான் புயலின் கண் பகுதியாக மாற்றம் அடையும். இதுதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
|
எங்கே
இந்த சாட்டிலைட் புகைப்படங்களின் புயலின் பாதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புயல் மாமல்லபுரம் வழியே கடந்து சென்று, ஆந்திர பிரதேச வரை சென்று பின் வலிமை இழக்கும். இதனால் தமிழகம் மட்டுமின்றி பாண்டிச்சேரி, ஆந்திர பிரதேசத்திலும் நல்ல மழை பெய்யும்.