என்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்!
பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
சென்னை: "என்கிட்ட யாருமே சரியா பேசுறது இல்லைம்மா" என்று வருத்தப்பட்டு கொண்டே இருந்த பள்ளி ஆசிரியர் காயத்திரி திடீரென பினாயிலை எடுத்து குடித்தும், தூக்கு போட்டுக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டார்.
புளியந்தோப்பு பென்ஷனர் தெருவைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணா - காயத்ரி. கிருஷ்ணா, மவுன்ட்ரோடில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். காயத்ரி, கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை செய்தவர். இவர்களுக்கு யுவஸ்ரீ என்ற 7 வயது மகள் உள்ளார். டீச்சர் காயத்ரிக்கு 29 வயதாகிறது.
"என்கிட்ட எந்த டீச்சரும் சரியா பேசறது இல்லை, கிண்டல் செய்றாங்கம்மா" என்று தன் தாயிடமும், கணவனிடமும் சமீப காலமாகவே, அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டு கொண்டே வந்திருக்கிறார் காயத்திரி.
இந்நிலையில், சம்பவத்தன்று ஸ்கூலில் இருந்து வந்த காயத்ரி, திடீரென பாத்ரூமுக்குள் நுழைந்து, அங்கு வைத்திருந்த பினாயிலை தூக்கி குடித்துவிட்டார். இதை பார்த்து பதறி போன குடும்பத்தினர், அவரை காப்பாற்றி.. சமாதானமும் செய்தனர். ஆனாலும் காயத்ரிக்கு மனசே ஆறவில்லை. அதனால் அன்னைக்கு ராத்திரியே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஹைதராபாத்தில் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தற்கொலை
தூக்கில் மனைவி தொங்குவதை கண்ட கணவன், பதறியடித்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இது சம்பந்தமாக ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள். பள்ளியில் காயத்ரியிடம் ஏன் யாரும் சரியாக பேசுவதில்லை, அவரிடம் யாராவது தவறாக நடந்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்று விசாரித்து வருகிறார்கள்.