சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் தந்தை பெரியார் சிலை மீது காவிச்சாயம்.. சீமான் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: கோவையில் தந்தை பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Periyar சிலைக்கு காவிப்பூச்சு : கொந்தளித்த தலைவர்கள்

    கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரிக்கின்றனர் என புகார் கூறப்பட்டது. கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டதாகவும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

    Seeman condemns Saffron paint thrown on Periyar statue

    இது தொடர்பாக செந்தில்வாசன், சுரேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கறுப்பர் கூட்டத்தின் பதிவுகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    மருதமலை முருகரை இழிவுபடுத்துவதா? அமைச்சர் வேலுமணி கண்டனம்- பெரியார் சிலை அவமதிப்புக்கும் எதிர்ப்புமருதமலை முருகரை இழிவுபடுத்துவதா? அமைச்சர் வேலுமணி கண்டனம்- பெரியார் சிலை அவமதிப்புக்கும் எதிர்ப்பு

    இந்த நிலையில் கோவையில் தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் போலீசில் சரண் அடைந்துள்ளார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    Seeman condemns Saffron paint thrown on Periyar statue

    கோவையில் ஐயா பெரியார் சிலை மீது காவிச்சாயத்தை வீசி அவரைக் கொச்சைப்படுத்த முயலும் சமூக விரோதிகளின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்கோடு அக்கொடுஞ்செயலைப் புரிந்தவர் எவராயினும் அவரை கடுஞ்சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    Seeman condemns Saffron paint thrown on Periyar statue

    சுப.வீ. கண்டனம்

    இதேபோல் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமது ட்விட்டர் பக்கத்தில், தங்கள் தலைவர்களின் படங்களுக்குத் தங்கள் கட்சியின் வண்ணம் பூசிப் பார்த்திருக்கிறோம். சரியான தலைவர்களே இல்லாத கட்சியினர் என்ன செய்வார்கள் பாவம், அடுத்த கட்சித் தலைவர் சிலையில் தங்கள் கட்சித் சாயத்தைப் பூசுவார்கள் போலிருக்கிறது என கூறியுள்ளார்.

    English summary
    Naam Tamilar Party Chief Co-ordinator Seeman has condemned that Saffron paint thrown on Periyar statue in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X