பெரியவர்கள் பகைக்கு குழந்தையை கொல்வதா.. விரைந்து தண்டனை வழங்குக.. சீமான் கோரிக்கை
சென்னை: விழுப்புரத்தில் சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு எவ்வித பாகுபாடுமின்றி விரைந்து தண்டனை வழங்கிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தங்கை ஜெயஸ்ரீ, குடும்ப முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன்.
பெரியவர்களுக்குள் இருக்கும் குடும்பப்பகைக்கு குழந்தையை எரித்துக் கொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடூரமான செயல். இதற்கு காரணமானவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.
விழுப்புரத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட மாணவி.. கொடியவர்களுக்கு கடும் தண்டனை வழங்குக.. வைகோ ஆவேசம்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்களால் மட்டுமே நிறுத்தப்படும் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.