வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வை புறக்கணிப்பதா? ராஜ்நாத்சிங்குக்கு சீமான் கண்டனம்
சென்னை: கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புறக்கணித்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
வைரமுத்துவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் புறக்கணித்தது அரசியல் அநாகரீகமான செயல்! விருதுகளால் வைரமுத்துவுக்கு புதிதாக எவ்விதப்பெருமையும் சேரப்போவதில்லை.
வைரமுத்துவின் கரங்களில் தவழ்வதால்தான் அவ்விருதுக்குப் பெருமை! இவ்விழாவைப் புறக்கணித்துத் தனக்குக் கிடைக்க இருந்த பேறையும், பெருமையையும் இழந்துவிட்டார் ராஜ்நாத் சிங்!
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் புறக்கணித்தது அரசியல் அநாகரீகமான செயல்! விருதுகளால் ஐயாவுக்குப் புதிதாக எவ்விதப்பெருமையும் சேரப்போவதில்லை.ஐயாவின் கரங்களின் தவழ்வதால்தான் அவ்விருதுக்குப் பெருமை!
— சீமான் (@SeemanOfficial) December 30, 2019
1/2
தொடர்ந்து தமிழுக்கும், தமிழ் பண்பாட்டுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகிற மத்திய பாஜக அரசின் தொடர் நடவடிக்கைகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது!
இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.