தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணிகளுக்கு ஆங்கிலத்தில் மட்டும் தேர்வா? சீமான் கண்டனம்
சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணிகளுக்கு ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி, பொறியாளர் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்புத் தேர்வினை இணையவழி மூலம் நடத்த முடிவு செய்திருக்கும் தமிழக அரசு, அதனை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது
இதன்மூலம், கிராமப்புற மாணவர்களும், தமிழ்வழியில் பயின்றவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். ஆகவே, அத்தேர்வினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்த வழிகோல வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
Comments
English summary
Naam Tamilar Party Chief Co-ordinator Seeman has opposed to hold TNPCB Recruitment Exams in English only.
Story first published: Tuesday, September 22, 2020, 15:08 [IST]