சாதி இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் அகற்ற போராடிய போராட்டக்காரர் பெரியார்: சீமான், வேல்முருகன்
சென்னை: சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற அரும்பாடாற்றிய போராட்டக்காரர் தந்தை பெரியார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
தந்தை பெரியாரின் 47-வது நினைவுதினம் இன்று. தந்தை பெரியாரின் நினைவுநாளில் தமிழக தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற அரும்பாடற்றிய போராட்டக்காரர்!
— சீமான் (@SeemanOfficial) December 24, 2020
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!
மானமில்லாதவனை மனிதனாகவே ஏற்க முடியாது என்று மான உணர்வூட்டிய மாமனிதர்!
ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! pic.twitter.com/xgpHVOOxbn
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற அரும்பாடற்றிய போராட்டக்காரர்!
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு! மானமில்லாதவனை மனிதனாகவே ஏற்க முடியாது என்று மான உணர்வூட்டிய மாமனிதர்! ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.என்று சொன்ன பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம்.#பெரியார் #Periyar pic.twitter.com/4PRzBCVAbh
— Velmurugan.T (@VelmuruganTVK) December 24, 2020
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்: மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.என்று சொன்ன பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம்.