உள்ளாடைக்குள் தங்க பேஸ்ட்... சென்னை ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய இரண்டு பேர்.. மதிப்பு ரூ.35 லட்சம்!
சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.35.5 லட்சம் மதிப்புடைய 706 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை சோ்ந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் மீட்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.
அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த சையத் அபுதாகீா்(37), ஜகுபா்அலி அப்துல்காதா் (54) ஆகிய இருவா் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் நிறுத்தி விசாரித்தனா்.
பின்பு தனி அறைக்கு அழைத்து சென்று சோதணை நடத்தினா். இருவரின் உள்ளாடைகளுக்குள் இருந்து தங்க பேஸ்ட் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.
இருவரிடமிருந்து 706 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.35.5 லட்சம்.இதையடுத்து மீட்பு பயணிகள் இருவரையும் சுங்கத்துறை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.