தலைசுத்திருச்சு.. சுயமரியாதைக்காரனே திமுகக்காரன்.. ரஜினியை கலாய்த்து உதயநிதி மாஸ் பொங்கல் வாழ்த்து!
சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள், என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள், என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. நடிகர் ரஜினியின் கருத்துக்கு எதிராக இணையத்தில் பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். இணையத்தில் இதனால் ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
திமுகவினர் பலர் ரஜினியின் கருத்தை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர். முரசொலி வாசகர்களும் மிக கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
உற்சாகம் பொங்கும் தமிழர் திருநாள்.. தமிழகம் முழுக்க பொங்கல் பண்டிகை.. மக்கள் கொண்டாட்டம்!
என்ன சொன்னார்
ரஜினி தனது பேச்சில், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை. முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம்
பத்திரிகை
பத்திரிக்கைகள் நடு நிலையுடன் செயல்பட வேண்டும். உண்மையில் பொய் என்ற தண்ணீரை கலக்க கூடாது. எது பால், எது தண்ணீர் என்று பத்திரிக்கையாளர்தான் சொல்ல வேண்டும்.என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
|
பதில் சொன்னார்
இதற்கு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பதில் அளித்துள்ளார். போன்ஹகள் வாழ்த்து சொல்வதை போல ரஜினியை அவர் கிண்டல் செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டில், முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள், என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
முன்பே கோபம்
இதேபோல் திமுகவின் சிஏஏ போராட்டத்தின் ரஜினியின் கருத்தை கலாய்த்து, உதயநிதி ஸ்டாலின் டிவிட் செய்து இருந்தார். தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும், என்று டிவிட் செய்து இருந்தார்.