எத்தனை தை மாதம் பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரவே வராது.. அமைச்சர் செல்லூர் ராஜூ!
சென்னை: எத்தனை தை மாதம் பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது. ஸ்டாலின் கனவு பலிக்காது என மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை ராயபுரத்தில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில் தை பிறந்தால் வழி பிறக்கும். அதிமுக ஆட்சி முடிவடைய நேரம் வந்துவிட்டது என்றார். இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பொதுக்குழு கூட்டம் அந்தக் கட்சியின் செயல்பாடுகளையும் ஆளுமையை பற்றியும்தான் சொல்லுவோம். எங்களது கட்சி ஆட்சிக்கு வருவதை பற்றி விவாதித்தோம்.
ஸ்டாலின்
வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம். ஸ்டாலின் பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியுமா என்று கேட்டார் பொது குழு கூட்டி காட்டியுள்ளோம். ஒவ்வொரு தையும் பிறந்தவுடன் எங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வது வழக்கம் ஆனால் எத்தனை பிறந்தாலும் அவருக்கு திமுகவிற்கு நல்வழி பிறக்காது.
தமிழர்கள்
இலங்கைக்கு சென்று ஈழத்தில் இறந்த தமிழர்களை பார்க்க போகிறோம் என்று சொல்லிவிட்டு ராஜபக்சே பரிசு வாங்கி வந்து விட்டுச் சென்ற திமுகவிடம் கேளுங்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
அச்சம்
போர் குற்றவாளி முன்னால் இலங்கையின் பிரதமரை அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால் திமுக ராஜபக்சே கொடுத்த விருந்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பி விட்டது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்ற நாங்கள் தயாராக வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம். மக்கள்தான் எஜமானர்கள் நிச்சயமாக மக்கள் எங்களை ஆதரிப்பார் என்பதில் எந்தவித அச்சமும் இல்லை.
திமுக காலம்
திமுக காலத்தில் தான் பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் இருந்துவந்தது அதிமுக காலத்தில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.