சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினிக்கு 2 படங்கள் வர போகுது.. அவர் பரபரப்பாக பேசுவது வழக்கம்தானே.. செல்லூர் ராஜூ

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்துக்கு 2 படங்கள் வரபோகிறது. அதனால் அவர் பரபரப்பாக பேசுவது வழக்கம்தானே என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் சிகரம் கே பாலசந்தரின் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

Sellur Raju says that Rajinikanth made sensational comments for his Darbar film release

அப்போது அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சிப்பது போல் எனக்கு பூச முயற்சி நடக்கிறது. இந்த முயற்சியில் திருவள்ளுவரும் சிக்கமாட்டார். நானும் சிக்க மாட்டேன் என ரஜினி கூறிவிட்டார்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. பஸ்ஸை வழிமறித்து.. டிக்டாக் செய்த அஜித்குமார் மீது வழக்கு பதிவுஎன்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. பஸ்ஸை வழிமறித்து.. டிக்டாக் செய்த அஜித்குமார் மீது வழக்கு பதிவு

இதைத் தொடர்ந்து தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்ற அவர் அங்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறுகையில் நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருகிறேன்.நான் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன்.

ஆளுமைமிக்க, சரியான தலைமைக்கு தற்போதும் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறிய கருத்து குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அவர் கூறுகையில் தமிழகத்தில் வெற்றிடம் இல்லை. ரஜினிகாந்த் படம் வெளியாகும் போதெல்லாம் ஏதாவது பரபரப்புக்கு இப்படி பேசுவது வழக்கம்தான். அது போல் தற்போது தர்பார் உள்ளிட்ட இரு படங்கள் வெளியாவதால் அவர் பரபரப்புக்காக அப்படி பேசியிருப்பார் என்றார்.

English summary
Minister Sellur Raju says that 2 more films of Rajini has to be released, so sensational comments made by him is usual one.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X