சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாதகத்தை நம்பி முதல்வர் கனவில் 25 அதிமுக தலைகள்.. வைரலாகும் ஜெ. மாஜி உதவியாளர் பூங்குன்றன் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் ஜாதகத்தை நம்பி 25 பேர் முதல்வர் கனவில் மிதக்கிறார்கள் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தமது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ள தகவல் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பூங்குன்றன் பதிவிட்டுள்ளதாவது:

முதலமைச்சர் கனவு காணமுடியுமா? முடியும் என்கிறது இன்றைய வரலாறு. முதலமைச்சராக வேடம் ஏற்று நடிக்கமுடியுமே தவிர கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வரலாறு மறைந்து, இன்று நிறைய பேர் முதலமைச்சர் கனவை கண்டுகொண்டிருப்பது என் தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏற்படுத்திய வரலாறு.

சாதாரண தொண்டன்கூட இந்த பதவியை அலங்கரிக்க முடியும் என்று சொல்லி, செய்துகாட்டியவர் எங்கள் அம்மா. அதனால் தான் என்னவோ இன்று நிறையபேர் இந்த கனவில்.

கட்சி பற்றி கவலையே இல்லை

கட்சி பற்றி கவலையே இல்லை

நான் சொல்வது உண்மை என்பது கனவு காண்பவர்களுக்கு புரியும். இரண்டாக பிரியும் போது குழம்பிய நான் இன்று கேள்விப்படுவதும், தெரிந்துகொண்டதையும் வைத்து பார்க்கும்போது, முதலமைச்சர் ஆசை அதிகமாகும்போது உள்ளடி வேலைகளும் அதிகமாகுமே என்று திகைத்து நிற்கிறேன். கலங்கி நிற்கிறேன். ஆக, யாருமே கட்சி நல்லாயிருக்கவேண்டும் என்று நினைக்கவில்லை,

ஜாதகத்தால் சிஎம் கனவு

ஜாதகத்தால் சிஎம் கனவு

தாம் நல்லாயிருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். முதலமைச்சர் ஆக உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டால், எங்களுக்கு என்ன தகுதியில்லை, யார் யாரோ ஆகும்போது நாங்கள் ஆகக்கூடாதா. ஜாதக கட்டம் எங்களுக்கு சிறப்பாக இருக்கிறது என்று சொல்லும் அவர்களின் பதிலை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.

25 பேரின் முதல்வர் கனவு

25 பேரின் முதல்வர் கனவு

அடித்துச் சொல்கிறார்கள் நான் முதலமைச்சர் ஆவேன் என்று. கட்டம் தன் கடமையை செய்யும் அதில் மாற்று கருத்தில்லை! எல்லோருமே இப்படி சொல்வதை பார்த்து எனக்கு மயக்கம் வருகிறது. இதற்கு ஏன் மயக்கம் என்று நினைக்கிறீர்களா? முதலமைச்சர், பொதுச்செயலாளர் கனவில் இருப்பவர்களின் எண்ணிக்கை எனக்கு தெரிந்தே 25ஐ தாண்டுகிறது.

விரைவில் காட்சிகள் அரங்கேறும்?

விரைவில் காட்சிகள் அரங்கேறும்?

இதில் சிரிப்பு என்னவென்றால் எல்லோரும் ஒன்றாக பயணித்தவர்கள், பயணிக்கப்போகிறவர்கள். காலம் கரைய கரைய காட்சிகள் அரங்கேறும். என்னுடைய வேண்டுதல் எல்லாம் இறைவா! இந்த தொண்டர்களை காப்பாற்று என்பதுதான். இவ்வாறு பூங்குன்றன் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

English summary
Former Chief Minsiter Jayalalithaa's PA Poongunran's Fb Post on AIADMK Senior leader target CM Post went viral on Social Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X