இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தா.பாண்டியன். 88 வயதாகும் இவர், கட்சிப்பணிகளில் தீவிரமாக இயங்கிவருகிறார். ஏற்கெனவே, சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர், அதற்கான மருந்துகளை உட்கொண்டுவருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.