மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹரின் மனைவி பேரா. பூரணம் கொரோனாவால் காலமானார்
சென்னை: மூத்த பத்திரிகையாளர் இரா. ஜஹவரின் மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனாவால் காலமானார்.
இடதுசாரி சிந்தனையாளரான மூத்த பத்திரிகையாளர் கம்யூனிசம்-நேற்று இன்று நாளை; மகளிர் தினம்- உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரது மனைவி பேராசிரியர் பூரணம், சென்னை ராணி மேரி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர்.
கடந்த 14 நாட்களுக்கு முன்னர் பேராசிரியர் பூரணம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
பேராசிரியர் பூரணம் மறைவுக்கு பல்வேறு பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
Senior Journalist Era Jawahar's wife Prof. Pooranam passes away due to the Coronavirus infection.
Story first published: Thursday, September 24, 2020, 14:28 [IST]