மூத்த பத்திரிகையாளர் பா. ஜெகதீசன் காலமானார்
சென்னை: மூத்த பத்திரிகையாளரும், தினமணி நாளிதழின் முன்னாள் செய்திப் பிரிவு தலைவருமான பா. ஜெகதீசன் சென்னையில் காலமானார்.
மறைந்த பா. ஜெகதீசனுக்கு வயது 67. இவருக்கு மனைவி உமா மகேஸ்வரி, மகள்கள் அபிராமி, ஐஸ்வர்யா ஆகியோர் உள்ளனர். சென்னை மேற்கு மாம்பலம் பரோடா தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் ஜெகதீசன்.
மறைந்த ஜெகதீசனின் இறுதிச் சடங்குகள் சென்னை கோவூரில் இன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெகதீசனின் உடல் இறுதி அஞ்சலிக்காக 8/104 ராதாபாய்நகர், 6 வது தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, கோவூர், சென்னை - 600128. அமிர்த வித்யாலயா பள்ளி பின்புறம் என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 9841848601
Comments
English summary
Senior journalist Jagadessan died if long time illness in Chennai, He was 67.
Story first published: Friday, November 22, 2019, 11:26 [IST]