சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூத்த பத்திரிகையாளர் தினமணி கே.எஸ். என்ற கே.சுப்பிரமணியம் காலமானார்

Google Oneindia Tamil News

சென்னை: மூத்த பத்திரிகையாளர் தினமணி கே.எஸ். என்ற கே. சுப்பிரமணியம் (வயது 68) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

சென்னையில் தினமலர் நாளிதழின் செய்தியாளராகப் பணியை தொடங்கினார். பின்னர் தினமணி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றினார்.

Senior journalist K Subramaniam passes away

தினமணியில் 30 ஆண்டுகாலம் செய்தியாளராக, தலைமை செய்தியாளராக பணிபுரிந்தார் கே.எஸ். என்ற கே. சுப்பிரமணியம். பின்னர் மீண்டும் தினமலர் நெல்லை பதிப்பில் பணிபுரிந்தார்.

சென்னையில் நிருபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்தார். உடல்நலக் குறைவால் சென்னையில் கே. சுப்பிரமணியம் திங்கள்கிழமையன்று காலமானார். அவருக்கு மனைவி அருள்மொழி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

"எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை விட சின்ன பையனை போய்.."... கதறி அழுத அனிதா!

மூத்த பத்திரிகையாளர் சுப்பிரமணியத்தின் மறைவுக்கு எம்யுஜே வெளியிட்ட இரங்கலில், தினமணி முன்னாள் தலைமைச் செய்தியாளரும், மூத்த பத்திரிகையாளரும் நம் சங்கத்தின் மூத்த உறுப்பினருமான கே. சுப்பிரமணியம் காலமானார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும் இரங்கல் தெரிவித்துள்ளன.

English summary
Senior journalist K Subramaniam passed away on Monday in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X