சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நியூஸ் 18 டிவி சேனலின் மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு பணியிலிருந்தபோது மாரடைப்பால் மரணம்

Google Oneindia Tamil News

சென்னை: மூத்த பத்திரிகையாளரும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் காலத்தின் குரல் ஒருங்கிணைப்பாளருமான திருநாவுக்கரசு மாரடைப்பால் பணியில் இருந்த நிலையில் காலமானார்.

தினமணி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றிய திருநாவுக்கரசு பின் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றினார், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

Senior Journalist Thirunavukkarasu passes away

காலத்தின் குரல் நிகழ்ச்சிக்கான விவாத பங்கேற்பாளர்களை ஒருங்கிணைத்தவர் திருநாவுக்கரசு, திராவிடர் இயக்க கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

இன்று காலத்தின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்தில் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது.

ஆன்லைன் பட்டாசு விற்பனையா.. இணையதளங்களை இழுத்து மூட ஹைகோர்ட் உத்தரவுஆன்லைன் பட்டாசு விற்பனையா.. இணையதளங்களை இழுத்து மூட ஹைகோர்ட் உத்தரவு

இதழியல் துறையை தம் மூச்சாக வாழ்ந்த திருநாவுக்கரசு பணியின் போதே அகால மரணமடைந்தது தமிழ் ஊடகவியலாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மூத்த ஊடகவியலாளர் திருநாவுக்கரசின் உடல் எண் 8/80, திருவள்ளூர்பேட், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, சென்னை-28ல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசுவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், படைப்பாளிகள் இரங்கல் செலுத்தி வருகின்றனர்.

English summary
Tamil Senior Journalist Thiruvanukkarasu passed away on Friday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X